நடிகர் ரஜினிகாந்த் சென்னை தீநகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது பத்மா என்கிற தூய்மை பணியாளர் 45 பவுன் தங்க நகை அடங்கிய பையை கண்டெடுத்து அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதன் உரிமையாளரிடம் சேர உதவினார். அவரின் இந்த நேர்மையை பாராட்டிய ரஜினிகாந்த் அவரை தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து பொன்னாடை போர்த்தி இரண்டு பவுன் தங்க சங்கிலியை அவருக்கு பரிசளித்தார்.