பெங்களூருவில் ,கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது அலுவலகப் பரப்பை விரிவாக்கம் செய்ய உள்ளது. 20,000 புதிய ஊழியர்களுக்கு வேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கூகுள் சமீபத்தில் பெங்களூரு மகாதேவபுராவில் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 'அனந்தா' என்ற பிரம்மாண்ட வளாகத்தைத் தொடங்கியுள்ளது
அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா போன்ற விசா விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதும், விசா நேர்காணல்களில் ஏற்படும் தாமதங்களும் இந்திய ஊழியர்களைத் தாயகத்திலேயே பணியமர்த்த அல்லது தக்கவைக்க நிறுவனங்களைத் தூண்டுகின்றன.
அமெரிக்காவில் சில பணிக் குறைப்புகள் செய்யப்பட்டாலும், ஒரு பகுதிப் பணிகள் பெங்களூரு போன்ற முக்கிய மையங்களுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விரிவாக்கமானது பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு அமையும்.
இந்த விரிவாக்கம் பெங்களூருவை கூகுளின் மிகப்பெரிய உலகளாவிய மையங்களில் ஒன்றாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.