
பாஜக மாநில தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதில் தற்போதைய தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று(ஏப்.10) வெளியானது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 3 பருவம் தீவிர பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகள் பாஜகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்வதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது.