
கோயம்புத்தூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம்.. இருப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.