
தமிழ்நாட்டில் (ஆக.05) இரு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது, மேலும், நெல்லை, குமரி, திண்டுக்கல், திருச்சி, தி.மலை, ஈரோடு, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுகை, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.