இந்தியாவிற்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே ஆன உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்ய ....களத்தில் இறங்கி ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.. அடுத்து ஆட களம்புகுந்த இந்திய அணி 30.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இதுவரை நடந்த உலகக்கோப்பைகளில் இந்தியாவோடு விளையாடிய பாகிஸ்தான் எட்டு போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..