ஜெய்பூர் ஜவல் மேன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் களத்தில் இறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடப் புகுந்த லக்னோ அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய, அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யை வீழ்த்தி வெற்றி பெற்றது