Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திரும்பி வருவோம்... ஆனா ஸ்ட்ராங்கா வருவோம்... அப்ப எங்களோட வெற்றியை தடுக்க முடியாது!

by Admin

திரும்பி வருவோம்... ஆனா ஸ்ட்ராங்கா வருவோம்... அப்ப எங்களோட வெற்றியை தடுக்க முடியாது!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 17வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 17வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பௌலிங்கின் முன்னால் அந்த அணி வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில் அடுத்ததாக பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயில் மூவரும் இணைந்து சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்தினர். சிக்ஸ் மற்றும் பவுண்டரி மழையால் சென்னை மைதானம் பரபரத்தது. 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ்.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ரோகித் சர்மா 63 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் அடித்து அந்த அணி ஓரளவுக்கு ரன்களை குவிக்க உதவினர். கீரன் பொல்லார்ட் தன்னுடைய அதிரடியை காட்ட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது.
சென்னையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து அடுத்த இடத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் அணி தன்னுடைய முதல் கட்டத்தை முடித்துள்ளதாகவும் அடுத்த கட்டத்தில் சிறப்பான ஆட்டங்களை அளிக்கும் என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்டத்தில் தன்னுடைய 100 சதவிகித போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அளிக்கும் என்று கூறியுள்ளார். அடுத்த கட்ட போட்டிகளை விளையாடும்போது அதை வலிமையாக எதிர்கொள்ளும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Share via