தெற்கு இஸ்ரேலிய டிமோனா மற்றும் அராட் நகரங்கள் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடியிருப்புப் பகுதிகளில் ஏவுகணைகள் நேரடியாக விழுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அராட் நகரில் 116 பேரும், டிமோனாவில் 64 பேரும் காயமடைந்தனர். இதில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையமான ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம்அமைந்துள்ள டிமோனா நகருக்கு மிக அருகில் இந்தத் தாக்குதல் நடந்தது. எனினும், அணுசக்தி நிலையத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது தாக்குதலுக்குப் பின் அராட் நகரில் சுமார் 150 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பல குடியிருப்பு கட்டிடங்கள் முழுமையாகத் தகர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலுக்கு "மிகவும் கடினமான இரவு" என்று தெரிவித்துள்ளார்