Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

by Editor

தமிழகம்
 இறந்தவா் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் கே. பெருமாள் (53). இவர் கடந்த 15-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில், இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். பின்னர், இவரது உடல் உறுப்புகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இவரது உடலுக்கு திண்டுக்கல்லில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இவரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் சக்திவேல் கலந்து கொண்டு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Share via