Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சாலை விபத்தில் 3பேர் உயிரிழப்பு

by Editor

தமிழகம்
சாலை விபத்தில் 3பேர்  உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சேர்ந்த சின்னப்பன் (34), ஜான் கென்னடி (35), ரொபர்ட் (32), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமார் (32), அகஸ்டின் பிரபு (26) ஆகிய 6 பேர் புனித வெள்ளியை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள தோமையார் ஆலயத்துக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டனர். 

ஒட்டன்சத்திரம் வழியாக வேடசந்தூர் நோக்கி ஆம்னி வேனில் வந்தனர். வேடசந்தூர் அய்யனார் கோயில் அருகே வந்த போது, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து சீத்தமரம் நான்கு வழிச் சாலை நோக்கி வந்த லாரி இவர்களது ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சின்னப்பன், முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜான் கென்னடி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த வேனில் வந்த ரொபர்ட், அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமார், அகஸ்டின் பிரபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டனர். 

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ரொபர்ட், அற்புதராஜ் உள்ளிட்ட 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே, மருத்துவமனையில் ரொபர்ட் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

Share via