Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நாகர்கோவிலில் 4,024 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

by Editor

தமிழகம்
நாகர்கோவிலில் 4,024 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகரில் நேற்று ஒழுங்கினசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த 17 வயதுடைய சிறுவனை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறுவனின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 இதேபோல் ஒழுங்கினசேரி பகுதியில் மது போதையில் ஆட்டோ ஓட்டிய வாலிபருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வாகனம் நிறுத்தியதாக 3 கார் மற்றும் 10 மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 17 நாட்களில் மாநகரில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாது இருத்தல், வாகன சாகசத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் அதிகமாக இருந்தன.

Share via