Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

முதியவர் கழுத்தை அறுத்த வட மாநில வாலிபர்

by Editor

தமிழகம்
முதியவர் கழுத்தை அறுத்த வட மாநில வாலிபர்

ஈரோடு கொல்லம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (70). ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இருவரும் வீட்டில் நேற்று மதியம் தனியாக இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென சுப்பிரமணி வீட்டுக்குள் நுழைந்தார். தான் வைத்திருந்த பிளேடால் திடீரென அந்த வாலிபர் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்தார். 

இதில் சுப்பிரமணிக்கு ரத்தம் வெளியே வந்தது. இதைக் கண்டு ஜெயலட்சுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த வட மாநில வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். கழுத்து அறுபட்ட சுப்பிரமணி ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வட மாநில வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராபி ஓரான் (28) என தெரிய வந்தது. 

இந்நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபி ஓரான் நேற்று இரவு திடீரென இறந்தார். சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ராபி ஓராணை அடித்தவர்கள் மீது சூரம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ய உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share via