
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். "நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச். ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீதும் தமிழிசை சௌந்தர்ராஜன் மீதும் இருக்கும் கோபத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.