
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில், இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,இலங்கை அணியும் வங்காளதேஷ் அணியும் மோதின.. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. இலங்கை அணி களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தது. 49 புள்ளி மூன்று ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை எடுத்தது. .அடுத்து ஆட வந்த வங்காளதேச அணி 41. 1 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்து இலங்கை அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.