Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்

by Editor

தமிழர் உலகம்
கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்

கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கிடைக்காததால் அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை. கீழடி, அகரம், கொந்தகையில் தலா எட்டு குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ளன. அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா மூன்று அடுக்குகளுடன் கிடைத்துள்ளன.

ஒரு உறைகிணற்றினுள் தண்ணீர் எடுக்க பயன்படுத்திய பானைகளும் கிடைத்துள்ளன. இதில் ஒரு பானை சிதிலமடைந்தும் மற்றொரு பானை முழுமையாகவும் உள்ளன. அருகில் தோண்டப்பட்ட மற்றொரு குழியிலும் சிதிலமடைந்த உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் இதுவரை 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் இதுவரை மொத்தம் 20 உறைகிணறுகள் வரை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அகரத்தில் ஆறாம்கட்ட அகழாய்விலும் 7 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன.

ஆறாம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறுகள் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளன. அகரத்தில் தொடர்ச்சியாக உறைகிணறுகள் கிடைத்து வருகின்றன. இது இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் இருந்ததற்கான சான்றாகவும், வீடுகள் தோறும் உறைகிணறுகள் வைத்திருந்ததற்கு சான்றாகவும் கருதப்படுகிறது. அகழாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறுகளை முழுமையாக வெளியே கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Share via

More Stories