இன்று புதுச்சேரி தட்டான்சாவடி மார்க்கெட் பகுதியில் காலை 10 .00மணி முதல் 11.00 மணிக்கு 11.00 மணி முதல் 12.00 மணி வரைக்கும் கடலூர் சாலை மால் அருகிலும் 12:00 மணி முதல் ஒரு மணி வரை தவளைகுப்பம் ஜங்ஷன் பகுதியிலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கழகத் தலைவர் அவர்களின் பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை. அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,

