பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கௌரவ்குமார் அவரது மனைவி முனிதகுமாரி மகன் பிர்மணி குமார் ஆகியோரின் உடல்களை பீகாரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்க வைக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பெற்றுள்ளார். இதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் தனி ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் இருந்து வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து பீகாரைச் சேர்ந்த நண்பர்களால் கொலை செய்யப்பட்டு குப்பை மேட்டில் வீசப்பட்ட உடல்கள் அண்மையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது