இன்று விசாகப்பட்டினம் ஒய் எஸ் ஆர் ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் அணிக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையான டி20 நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி அடையச் செய்தது.