வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் கிரீன் பீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது t20 தொடரை இந்திய மகளிர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5க்கு 3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப் போட்டியில் ரேணுகா தாகூர்,மற்றும் தீப்தி சர்மா ஆகியோரின் வலுவான பந்துவீச்சால் இலங்கை அணி 112 ரன்களை ஏழு விக்கெட் இழப்பில் பெற்றது. இந்திய அணி 13.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு115 ரன்கள் எடுத்தது.