நேற்று இரவு ஏழு மணி அளவில் லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்திய- தென்னாப்பிரிக்க இடையேயான டி20 நான்காவது போட்டி கடும் பனியின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது..ஐந்தாவது போட்டி நாளை ஏழுமணிக்கு அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடக்கிறது. போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.