தெற்கு ஆஸ்திரேலியா அடிலெய்டி மைதானத்தில் நடந்துவரும் கிரிக்கெட் இரண்டாவது ஒருநாள் 50 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 29. 3ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து விளையாடுகிறது .இன்னும் 125 ரன்கள் எடுத்தால் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ரன்களை எடுக்காத பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சம நிலையில் நிற்கும்.