Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

குற்றாலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற திருநங்கைகளின் முக்கிய சடங்கு நிகழ்வான இல்ல பால் ஊற்றும் விழா 

by Editor

தமிழர் உலகம்
குற்றாலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற திருநங்கைகளின் முக்கிய சடங்கு நிகழ்வான இல்ல பால் ஊற்றும் விழா 

தென்காசி மாவட்டம் நன்னகரம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமாக திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
திருநங்களைகளில் முக்கிய நிகழ்வாக இல்ல பால் ஊற்றும் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த இல்ல பால் ஊற்றும் விழாவானது,ஆணாக பிறந்து வளர்ந்து முழுமையாக பெண்ணாக மாறிட அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா என்ற சடங்கு நடத்துவது வழக்க்கம்

அந்த வகையில், குற்றாலத்தில் திருநங்கையர்களின் முக்கிய  சடங்கான பால் ஊற்றும் நிகழ்வு மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது. குற்றாலம் மெயின் அருவியில் 2 திருநங்கைகளுக்கு நடைபெற்ற இந்தநிகழ்வில் திருநங்கைகள் முகத்தை மூடி அருவிநீர் செல்லும் பகுதிவரை அழைத்து செல்லப்பட்டு சடங்கு விழா நடைபெற்றது.

ஆட்டம் பாட்டத்துடன் குற்றாலத்தில் நடைபெற்ற திருநங்கைகளில் சடங்கு நிகழ்வை சுற்றுலா பயணிகளில் ஆர்வத்தை ஈர்த்தது. மேலும் இந்நிகழ்வையொட்டி காவல்துறையினர்  பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Share via

More Stories