Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைக்கு வீட்டு மனை, ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனைக்கு வீட்டு மனை, ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ஏர்ரவாரிபாளையத்தை சேர்ந்தவர் ரஜினி, ஹாக்கி வீராங்கனை. இவர் தென் மாநிலங்களில் இருந்து ஒலிம்பிக் ஹாக்கியில் பங்கேற்ற ஒரே விளையாட்டு வீராங்கனை ஆவார்.

 இவர் கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதோடு, 110 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்

. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்க போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியதற்கும், அணியின் வெற்றிக்கும் ரஜினி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனை விசாகப்பட்டினத்தில் உள்ள தலைமை செயலகத்தில் ஒலிம்பிக் ஹாக்கி வீராங்கனை ரஜினி தனது பெற்றோருடன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார்.

அப்போது, ஒலிம்பிக்கில் சிறந்து விளங்கிய ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், முந்தைய அரசாங்கத்தில் ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட நிலுவை தொகையை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார்

. மேலும், திருப்பதியில் 9,000 சதுரஅடி வீட்டுமனை, மாதந்தோறும் ரூ.40,000 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்தார்.

Share via