அசாம் மாநில பர்சப்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது .அடுத்த பஞ்சாப் அணி 18.5 ஓவரி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.