நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.