Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில்.....

by Admin

தமிழர் உலகம்
 ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில்.....

தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு முதலாவதாக தச்சன் குறிச்சியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. வாடிவாசல் வழியே சீறிவரும் காளைகளை தினவெடுத்த தோள் கொண்ட காளையர்கள் எதிர்நோக்கி திமிலை இறுக பிடித்து காளையை சாய்த்து வெற்றி பெற்று பரிசுகளை பெரும் முனைப்போடு களத்தில் குதித்துள்ளனர்.

மஞ்சுவிரட்டு- ஜல்லிக்கட்டு என்கிற இந்த வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெற்றது. போர் முனையில் எதிரி படைகளை வீழ்த்தி வெற்றி பெற்ற வீரர்கள் போர் இல்லாத காலங்களில் தங்களுடைய வீரத்தன்மையை என்றென்றும் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு போட்டியாகவும் பண்பாட்டு கூறுகளில் ஒன்றாக கருதப்படும் திருமணத்தில் முல்லை நிலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு இளைஞர்களின் திறனை கணக்கிடும் பொருட்டும்  இப்போட்டி நிகழ்த்தப்பட்டது கொல்லெறிந்து கோடு அஞ்சு வானை மறுமையிலும் புல்லாலே ஆயர் மகள் என்று இலக்கியம் சொல்லும். களத்தில் வெறிகொண்டு நிற்கும் காளையை அடக்குகிற இளைஞன் எவனோ அவனையே முல்லை நில பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் .அப்படி காளையை அடக்கின்ற ஆற்றல் இல்லாதவர்களை அவள் அடுத்த ஜென்மத்தில் கூட நினைத்துக் கூட பார்க்க மாட்டாள் என்பதுதான் இலக்கியம் வழியாக அன்றைய சமூக மக்களினுடைய பண்பாட்டுக் கூறுகளை நாம் பார்த்தோம். உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது இன்றைக்கு பேசப்படும் மொழியாக இருந்தாலும் அன்றைக்கு வீரம் தான் ஒரு இளைஞனுடைய புருஷ லட்சணமாக இருந்தது.. அதனுடைய தொடர்ச்சியாக -எச்சமாக இன்றைக்கு நம்முடைய பண்பாட்டு கூறுகளில் இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முதன்மை இடத்தை பெற்றிருக்கிறது.

Share via

More Stories