Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

குரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

by Admin

விளையாட்டு
குரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து



இஸ்ரேல் வீராங்கனையை முதல் போட்டியிலும், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.

இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்தார். இந்த குரூப்பில் ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் வீராங்கனைகளும் இடம் பிடித்திருந்தனர்.நான் யி செங்

25-ம் தேதி நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இஸ்ரேல் வீராங்கனையை 2-0 (21-7, 21-10) என வீழ்த்தியிருந்தார். இன்று ஹாங்காங் வீராங்கனை நான் யி செங்-கை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் பி.வி. சிந்து அபாரமாக செயல்பட்டார். முதல் செட்டை 21-9 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப்பில் முதல் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு  பி.வி. சிந்து முன்னேறினார்.

Share via