Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?

by Editor

தமிழர் உலகம்
கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?

 பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும்,  நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும் நாம் கண்டிருப்போம்.இது போன்று கோயில் கிணற்றில் காசு  போடப் பட்டதின் காரணத்தைப் பற்றி பார்ப்போம். 

பழமையான காலங்களில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. மண், நீர், காற்று ஆகியவற்றில் இயற்கையாகவே செம்பு உலோகம் உருவாகிறது. இவ்வளவு ஏன், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது.

பழங்காலத்தில் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளிலிருந்தும் தான் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். 
அப்படி எடுத்து வரும் தண்ணீரை அருந்துவதற்கு செம்பு கலந்த பின் நீரை அருந்துவது உடலுக்கு வலிமையும், குளிர்ச்சியும் தந்து நலம் உண்டாக்கும். இதனால், செப்பு காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. 

ஆனால், இன்றைய காலகட்ட த்தில், ஆறு, கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பழக்கம் காணாமலேயே போய்விட்டது. அதோடு,  செப்பு காசு முறை அழிந்துவிட்டது. ஆனால், பழமையான கோயில்களில் இருக்கும் கிணற்றில் காசு போடும் பழக்கம் மட்டும் இன்னும் நம்மில் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மையில், செம்பு காசுகளைத் தான் கிணறு, குளத்தில் போட வேண்டும். அவைகள் தான் நமக்கு நன்மையளிக்கும்.

Share via

More Stories