Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

by Admin

தமிழர் உலகம்
 தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

 



நேற்று ,73 வதுகுடியரசு தினம் சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடந்தது.அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.இத்தகு அவமதிப்பைகண்டு
கொதித்து போன தமிழ் உணர்வாளர்கள் அதிகாரிகளிடம் தமிழ்த்தாய் பாடல் இசைக்கும் பொழுது   எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது தெரியாத என்று   கேள்ளி எழுப்பினர்.அதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை   என்று உயர் நீதி மன்றம் சொல்லியிருக்கிறது என்று பதிலளித்தனர்.அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று எதிர்கேள்வி எழுப்ப..அதிகாரிகள் பதில் சொல்லமல் சென்று விட்டனர் .இந்நிகழ்வு ஊடகங்களில்
வெளிவர   அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன.தி.மு.க மாநில மகளிரணி-
தலைவர் கனிமொழி எம்.பி,. அதிகாரிகள் ,மாநில அரசை விட பெரியவர்களா என்று ஆவேசமாக தம் ட்விட்டர்
பதிவில் பதிவிட்டார்.இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன்,மக்கள்வாழ்
வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் போன்றோர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.இந்நிலையில்,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை காவல்துறையில் ஆன்லைன் மூலமாக  புகார் கொடுத்துள்ளார்.காவல்துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்.

 

Share via

More Stories