Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை உயிரிழப்பு!

by Editor

விளையாட்டு
இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை உயிரிழப்பு!

இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, சந்திரா தோமர். 89 வயதாகும் இவர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் வசித்து வந்தார். சந்திரா தோமர், தனது 60 வயதிற்கு மேல்தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். முதியோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று, பலரின் கவனத்தை ஈர்த்தார்.

இவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சந்திரா தோமர் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Share via