Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்

by Editor

சுற்றுலா
காஞ்சீபுரம் அருகே  தாமல் ஏரியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்

 

காஞ்சீபுரம் அருகே தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது


இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளின் ஒன்றான தாமல் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பி வழிகிறது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமல் ஏரி 206 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து தற்போது சுமார் 400 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து 20 நாட்கள் உபரி நீர் வெளியேறும் என காஞ்சீபுரம் பாசன பிரிவு இளம்பொறியாளர் மார்கண்டன் தெரிவித்தார்.


நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் தாமல் கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கார், இருசக்கர வாகனங்களின் மூலம் தாமல் ஏரிக்கு வந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்தனர்.


4 ஆண்டுகளுக்கு பிறகு தாமல் ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

Share via