Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தென்காசியில் பலத்த மழை; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

by Editor

சுற்றுலா
தென்காசியில் பலத்த மழை; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

 

தென்காசியில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பெய்த கன மழையானது இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு யானை பாலம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை தென்காசி சுவாமி சன்னதி பஜாரி சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் யானை பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றவர் தவறி ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த தகவல் கேள்விப்பட்டு உடனடியாக அங்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெள்ளம் அதிகமாக இருப்பதால் குளிப்பதற்கோ, தர்ப்பணம் செய்வதற்கோ யாரும் வரக்கூடாது என காவல் துறையினர் சார்பில் காவல் ஆய்வாளர் கற்பகராஜ், தனிபிரிவு தலைமை காவலர் முத்துராஜ், முத்துப்பாண்டி, காவலர் பாலமுருகன் ஆகியோர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

Share via