Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கொடைக்கான‌ல் ஓராவி அருவியில் குளிக்க‌ சென்ற‌ ப‌ய‌ணி உயிரிழ‌ப்பு

by Editor

சுற்றுலா
கொடைக்கான‌ல் ஓராவி அருவியில் குளிக்க‌ சென்ற‌ ப‌ய‌ணி உயிரிழ‌ப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் முக்கிய சுற்றுலா இடங்களான வ‌னத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தூண்பாறை குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசிப்பது வழக்கம். தொடர்ந்து கொடைக்கானலில் அவ்வப்போது கனமழை பெய்து வரும் நிலையில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடி வருகிறது .

இதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். தொடர்ந்து கொடைக்கானல் அருகே பாரதி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த சுற்றுலா பயணி அருண்குமார் 24 தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவருடன் வந்த சக பயணிகள் கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தற்போது அவரின் உடலைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் சென்று அருவிகளில் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வனப்பகுதிக்குள் சென்று வருவது தொடர்ந்து வருகிறது. இதனைக் காவல்துறை மற்றும் வனத்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Share via