Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கேரளாவில் “சுற்றுலா கேரவன்கள்

by Editor

சுற்றுலா
கேரளாவில் “சுற்றுலா கேரவன்கள்

 

கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சுற்றுலா கேரேவன் வாகனத்தை நாட்டின் சுற்றுலா துறை மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.


கேரளாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு மிக நெருக்கமான பயணத்தை உருவாக்கும் வகையில் கேரள அரசு கடந்த 15ஆம் தேதி ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை கேரளா சுற்றுலா துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனிராஜ் ஆகியோர் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். கேரளாவில் கேரவன் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் இந்த கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த கொள்கையின் கீழ் அனைத்து நிறுவனங்களும் மற்றும் தனியார் நபர்களும் தங்கள் கேரவன் வாகனங்களை வெளியிடலாம் என சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. மேலும் சோபா , படுக்கை ,குளிர்சாதன பெட்டி, மற்றும் மைக்ரோ வேவ் சமையலறை, டைனிங் டேபிள், கழிவறை, ஏசி, இன்டர்நெட் வசதி, ஜிபிஎஸ் போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கேரவனில் பயணம் செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், பிரத்தியேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை மந்திரி கூறினார்.

 

Share via