Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்

by Editor

ஆன்மீகம்
வேளாங்கண்ணி பேராலயத்தில்  கொடியேற்றம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8,ம் தேதி வரை 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், முதல் நாள் திருவிழாவான 29-ஆம் தேதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பேராலயத்தை சுற்றி கொடியானது உள்ளூர் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் கொடிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சரியாக மாலை 5:05 க்கு கொடியானது கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், ஆட்சியர் அருண் தம்புராஜ், பாதிரியார்கள் மற்றும் பணியாளர்கள் என 50 நபர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

Share via