Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

விடிய விடிய கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.

by Editor

ஆன்மீகம்
விடிய விடிய கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.

தை மாத பௌர்ணமி நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் அண்ணாமலையார் மலையை சுற்றி விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி நேற்று இரவு 7:49 மணிக்கு தொடங்கி இன்று 12ம் தேதி புதன்கிழமை இரவு 8:16 மணிக்கு நிறைவடையும் என்பதால் நேற்று இரவு பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்றனர். 

இதனை தொடர்ந்து கிரிவலம் முடிந்த பக்தர்கள் தங்களது ஊருக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரம் காட்பாடி பயணிகள் ரயில் வந்தவுடன் பக்தர்கள் ரயிலில் ஏறி தங்களது ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக இரயிலில் ஏற பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முன்டியடித்து சென்றதாலும், இரயில் அடுக்குகளில் இருந்து வந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.

Share via