Advertiment

இன்று கார்த்திகை தீப திருநாள்.

by Admin

ஆன்மீகம்
இன்று கார்த்திகை தீப திருநாள்.

சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்த கார்த்திகை திருநாளில்,வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபங்களில் தெய்வீகத்தை தரிசிக்கும் தருணம் இது. திருவண்ணாமலை திருத்தளத்தில் நேற்று காலை பரணி தீபம் இயற்றப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணா மலையில் மகா தீபம் இயற்றப்படும். மகா தீபம் ஏற்றிய பின்னரே வீடுகளில் ஆறு மணி கழித்து ஐந்து விளக்குகளை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாட வேண்டும். பஞ்ச அகல் விளக்குகள் ஏற்றுவதன் மூலம் செல்வம், கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுதல், பொன் பொருள் சேர்க்கை என பல்வேறு வகையான ஐஸ்வரியங்களை தரும் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் ஐதீகம். இத் திருவிளக்கில் இயற்றப்படுவதின் மூலம் தீப ஒளியில் தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும்.

 

Share via

More Stories