Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மண்டல பூஜை நவம்பர் 16-ம் தேதி துவங்கி, டிசம்பர் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது

by Admin

ஆன்மீகம்
 மண்டல பூஜை நவம்பர் 16-ம் தேதி துவங்கி, டிசம்பர் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது

கார்த்திகை மாதம் நாளை (நவம்பர் 16) துவங்குவதை முன்னிட்டு புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று (நவம்பர் 15) மாலை நடை திறக்கப்பட்டது.வழக்கமாக அபிஷேகங்கள், பூஜைகள் நிறைவடைந்த பிறகு இரவு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு, கோவில் நடை சாத்தப்படும்.

இன்று நடைபெறும் பூஜையில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை

. நவம்பர் 16ம் தேதி கார்த்திகை முதல் நாளான நாளை அதிகாலை முதலே பக்தர்கள், சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
2024ம் ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன் மண்டல பூஜை நிறைவு பெறும்.

மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 26ம் தேதி இரவு 11 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜை 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நடைபெறும்.

Share via