Advertiment

 ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு  பால்குடம் எடுத்தல் ஊர்வலம்

by Admin

ஆன்மீகம்
 ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு  பால்குடம் எடுத்தல் ஊர்வலம்

 ஆடிபூரத் திருவிழாவை முன்னிட்டு  பால்குடம் எடுத்தல் ஊர்வலம் - மழை வேண்டியும் தொழில், வியாபாரம், விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்பு..  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ஹரிஹரன் ஐயப்பா சேவா டிரஸ்ட் சார்பில் மழை வேண்டியும், தொழில் வியாபாரம் ,விவசாயம் செழிக்க வேண்டி  பால்குடம்  ஊர்வலம் நடைபெற்றது.

ஐயப்பா சேவா டிரஸ்ட் சார்பில் 8 ம் ஆண்டு 351 பால்குடம் எடுத்தல் நிகழ்வானது கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் பூவனாக சுவாமி திருக்கோவில் முன்பு தொடங்கிய  ஊர்வலமானது கோவிலை சுற்றி வலம் வந்தது பக்தர்கள் எடுத்து பல அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது 

இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்..

 

Share via

More Stories