Advertiment

 சதுரகிரியில் இன்று முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி.

by Editor

ஆன்மீகம்
 சதுரகிரியில் இன்று முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி.

சித்தர்கள் வாழும் மலையாக விளங்கும்  சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் மாதம்தோறும் நாட்டின்பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்தவண்ணமுள்ளனர். இக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று புதன்கிழமை முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.

Share via

More Stories