
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து பாதைகளில் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது இந்த நீர்வரத்து சீராக உள்ளது இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி அளித்துள்ளனர்