Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை

by Editor

சுற்றுலா
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. 

இந்நிகழ்ச்சிக்காக ஏற்கனவே மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நாளை அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில் சிறப்பு ரயில் தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நான்காவது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், வதோரா, சூரத், நந்தர் பர், ஜல்கான், அகோலா, நன்டெட், காச்சி குடா, ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

Share via