Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வட மாநிலபுண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

by Editor

சுற்றுலா
பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் வட மாநிலபுண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலானது செங்கோட்டை வழியாக வட மாநிலங்களில் உள்ள புண்ணிய தலங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி மேலாளர் பேட்டி.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் சுற்றுலா பயணிகளுக்காகவே பிரத்தியேகமாக 'பாரத் கௌரவ் சுற்றுலா' ரயிலானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த ரயிலானது, தனது முதல் சேவையை 'புண்ணிய தீர்த்த யாத்திரை' என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளது.

 அதாவது, மே மாதம் 4-ம் தேதி முதல் 11 நாட்கள் 12 இரவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த ரயிலானது, கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, கொல்லம் வழியாக தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூர் சென்றடைந்து அங்கிருந்து விஜயவாடா வழியாக வட மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்ளது.

அந்த வகையில், வடமாநிலங்களில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி, அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய தளங்களுக்கு செல்ல உள்ள சூழலில், புண்ணிய தளங்களில் அருகாமையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் செல்ல ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மொத்தம் 700 பயணிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via