Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Editor

சுற்றுலா
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவிக்கு காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர். அவர்கள் அருவியில் ஆசைதீர குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, புல்வெளி தோட்டம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

பின்னர், அவர்கள் அருவியின் மேல் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் உற்சாகமாக படகு சவாரி செய்து கோதையாற்றின் அழகை கண்டு ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அருவிப்பகுதி குளு குளுவென இருந்தது.

தற்போது மண்டல, மகர விளக்கு சீசன் என்பதால் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திற்பரப்புக்கு வருகை தந்தனர். அவர்கள் அருவியில் குளித்து விட்டு அருகில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share via