Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்

by Editor

சுற்றுலா
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது இதன் காரணமாக ஏற்கனவே அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலம் ஆகும் இதன் தொடர்ச்சியாக  குற்றாலத்தில் சீசன் முன்னதாகவே  தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது. மேலும் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது மேலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டத் தொடங்கியது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக பயணிகளை அப்புறப்படுத்தினர், இதன்  தொடர்ச்சியாக குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள்  குளிக்கதடை விதிக்கப்பட்ட நிலையில் இரவில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள்  ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Share via