Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நம்பழந்தமிழரின்காதணிகளின் #பெயர்களைஅறிந்துகொள்வோம். (பாம்படம் )

by Editor

லைப் ஸ்டைல்
நம்பழந்தமிழரின்காதணிகளின் #பெயர்களைஅறிந்துகொள்வோம். (பாம்படம் )

நகைகள் அணிவது, நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை துாண்டி, ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது.

ஆபரணங்கள் அணிவதால், நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும், நன்மை உண்டாகிறது.
நெற்றிச் சுட்டி: தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில் அழகாக குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது. நெற்றிச்சுட்டி அணியும்போது, தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறது.
தோடு: காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிவதுண்டு. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில், ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரம் இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்த தான்.
கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன; மூளையின் செயல்திறனும் அதிகரிகிறது.
மூக்குத்தி: மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும் சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் துாண்டப்படும்போது, அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.

Share via