Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது

by Editor

லைப் ஸ்டைல்
உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது

 உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். ஆனால் சமைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பது தவறு. அதனை மீண்டும் சூடுபடுத்தினால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும். மேலும் செரிமான கோளாறுகளை உருவாக்கும்.


காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதனை மறுபடியும் சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறும். இது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். எனவே காளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது.

சிக்கன் உணவுகள் சிக்கன் குழம்பு இவைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு கடுமையான செரிமான பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

பழைய கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து போகும். இதன் விளைவாக புற்றுநோய் அபாயம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பீட்ரூட்டை சூடுபடுத்துவதால் கீரையை போலவே, பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டும் அழிந்து போகும். எனவே பீட்ரூட்டை சமைத்த உடனே சாப்பிடுவது நல்லது.

முட்டைகளில் புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது. அதனை சரியான முறையில் சாப்பிட்டால்தான் அதன் சத்துக்கள் கிடைக்கும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரத சத்தின் கூறுகள் முற்றிலும் மாறுபடும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

Share via