Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அஜித்தை விடியோ எடுத்த ரசிகை பணி நீக்கம் தனியார் மருத்துவமனை நடவடிக்கை

by Editor

சினி ஆல்பம்
அஜித்தை விடியோ எடுத்த  ரசிகை பணி நீக்கம் தனியார் மருத்துவமனை நடவடிக்கை

நடிகர் அஜித் கடந்த ஆண்டு தனது மனைவி ஷாலினியுடன் முகக்கவசம் அணிந்தபடி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனைக்குள் நுழையும் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. அந்த விடியோவை எடுத்தவர் மருத்துவமனை ஊழியரும் அஜித்தின் ரசிகையுமான ஃபர்சானா என்று தெரியவந்தது .


சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் அவர்  அஜித்துடன் இணைந்து செல்பியும் எடுத்துக்கொண்டார்.
சமூகவலைத்தளங்களில் விடியோ வெளியானதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த மருத்துவமனை நிர்வாகம், ஃபர்சானாவைப் பணியிடை நீக்கம் செய்தது.


இதையடுத்து அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ஃபர்சானா உதவி கோரினார். ஷாலினியின் பரிந்துரையால் ஃபர்சானாவுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. எனினும் சில நாள்களில் ஃபர்சானா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அஜித்தை நேரில் சந்திக்க உதவும்படி அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் உதவி கோரினார் ஃபர்சானா.இந்நிலையில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஃபர்சானா. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என அறியப்படுகிறது.

Share via