Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கழுத்தில் கருநாகத்தை அணிந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் !

by Editor

ஆன்மீகம்
கழுத்தில் கருநாகத்தை அணிந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் !

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.


இந்தியாவில் உள்ள சாதுக்களும் சன்னியாசிகளும் ஆண்டுதோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இந்த விரதத்தை மேற்கொண்டார்.

அவர் உத்தரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை சூழல் மிகுந்த இடத்தில் தங்கியிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். அப்போது வடமாநிலங்களில் சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாடிகள் பிடித்த பாம்பை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.அந்த வகையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாக பாம்பை அணிவித்து மரியாதை செய்தனர். இதை ஏற்ற மணவாள முனிகளும் அந்த பாம்பாடிகளுக்கு அருளாசி வழங்கினார்.

Share via